ஸ்ரீ ஞாநத்ருஷ்டி அழகப்பங்கார் ஸ்வாமி
(சித்திரை-திருவோணம்)
நித்யத்தனியன்
வரதார்ய குரோபுத்ரம் தத்பதாப்ஜைக தாரகம் |
ஜ்ஞாநபக்த்யாதி ஜலதிம் வந்தே ஸுந்தரதேசிகம் ||
திருநக்ஷத்ரதனியன்
சைத்ரேச்ரவண நக்ஷத்ரே ஸ்ரீமத்வத்ஸ குலோத்பவம் |
வரதார்ய குரோசிஷ்யம் ஸுந்தரார்யம் ஸமாச்ரயே ||
சீர்
வாழி அழகப்பனருள் வாய்த்த திருவடிகள்
வாழி வரதாசாரியன் வாழ்மைந்தன் – வாழியே
சடகோபன் தண்டமிழைத் தாரணி யோர்க்கெல்லாம்
திடமாகவே உரைகும் சீர்.
வாழித்திருநாமம்
சீராரும் செங்கமலத் திருதாளிணை வாழியே
திருமுழுந்தாளும் குறங்கும் திருவரையும் வாழியே
பாராருந் திருவுந்திப் பட்டாடை வாழியே
பங்கயத்தார் உறைமார்பும் பணைப்புயமும் வாழியே
காராரும் திருக்குழலும் கழுத்தழகும் வாழியே
கருணைபொழி விழியும் காதிரண்டும் வாழியே
ஏராருந் திருநாசி இலங்கு முடி வாழியே
எங்கள் அழகப்பையங்கார் இனிதூழி வாழியே
தொங்கல்
மாலடியார் வாழமதிள் குருகூர் தான் வாழ
சீலமகு நம்மாழ்வார் சீர் வாழ –சாலவே
எந்நிலமும் போற்றும் எழில் அழகப்பாரியனே
இன்னுமொரு நூற்றாண்டிரும்.
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx