ஸ்ரீ (சித்தண்ணா) சடகோபாசார்யார் ஸ்வாமி
(ஐப்பசி – ஆயில்யம்)
நித்யத்தனியன்
நப்தாரம் சடகோபஸ்ய பௌத்ரம் ராகவஸத்குரோ: |
புத்ரம் சடரி போச்சிஷ்யம் சடகோபகுரும்பஜே ||
திருநக்ஷத்ரதனியன்
ஆச்லே ஷாஸு துலாமாஸே ஜாதம் வத்ஸவிபூஷணம் |
சடகோப குரோ சிஷ்யம் சடகோப குரும்பஜே ||
சீர்
வாழி சடகோபாரியன் தன் மாமலர்த்தாள்
வாழியவன் அருள்கூர் வாய்மொழிகள் – வாழியே
வள்ளல் சடகோபாரியன்பால் மாறன்
தெள்ளு தமிழ் ஈடுரைக்கும் சீர்.
வாழித்திருநாமம்
ஐப்பசியில் ஆயில்யத்து அவதரித்தோன் வாழியே
அருளாளர்க்கு ஆராதனை செய்துகந்தோன் வாழியே
எப்புவியும் ததீயர்கட்கு ஈடளிப்போன் வாழியே
எழில் சடகோபாரியன் இணையடியோன் வாழியே
முப்புரிநூல் மணிமார்பில் மின்னுமவன் வாழியே
மூவுலகும் புகழ்முடும்பைக் குலத்துதித்தோன் வாழியே
எப்பொழுதும் சீர் பாடியும் ஈந்தருள்வோன் வாழியே
எங்கள் சடகோபதேசிகன் இணையடிகள் வாழியே
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx