ஸ்ரீ இராகவாசார்யர் ஸ்வாமி
(ஆடி –பூரம்)
நித்யத்தனியன்
குமார சடகோபார்ய பாதபத்ம மதுவ்ரதம் |
தத்ஸூநும் சாஸ்த்ரதத்வக்ஞம் ராகவாசார்யமாஸ்ரயே ||
திருநக்ஷத்ரதனியன்
கர்க்கடே பூர்வபல்குந்யாம் ஜாதம் வத்ஸாப்தி கௌஸ்துபம் |
குமார சடகோபார்யஸூதம் ராகவம் ஆஸ்ரயே ||
சீர்
வாழி இராகவாரியன் தன் மாமலர்த்தாள்
வாழியவன் இன்சொலருள் வாழி முடும்பை வாழியே
தந்தை சடகோப தேசிகனருளால் மாறன்
தென்தமிழ் ஈடுரைக்கும் சீர்
வாழித்திருநாமம்
பார்புகழும் மகிழ்மாறமன் பதம்பணிவோன் வாழியே
பாடியத்தின் உட்பொருளைப் பகர்ந்தருள்வோன் வாழியே
சீருலவு லோககுரு மொழிமகிழ்வோன் வாழியே
சிந்தையினால் வரயோகி வசனத்தோன் வாழியே
ஏருணர்வு குமார சடகோபன் அடிதுதிப்போன் வாழியே
எழிலமர்ந்த அடியவர்கட்கு இதமுரைப்போன் வாழியே
ஆடிதனில் திருப்பூரத்து அவதரித்தோன் வாழியே
அருளமர்ந்த இராகவாரியன் அடியிணைகள் வாழியே.
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx