ஸ்ரீ அழகப்பையங்கார் ஸ்வாமி
(ஐப்பசி-உத்தரம்)
நித்யத்தனியன்
ஸ்ரீவாத்ஸ்ய வேங்கடாசார்ய தநயம் தத்பதாச்ரயம் |
தேவராஜ க்ருபா பாத்ரம் வந்தே ஸுந்தர தேசிகம் ||
திருநக்ஷரதனியன்
ஆச்வீநோத்தர பல்குந்யாம் அவதீர்ணம் மஹீதலே |
வேங்கடார்ய ஸுதம் வாத்ஸ்யம் வந்தே ஸுந்தரதேசிகம் ||
சீர்
வாழி வேங்கடாரியன் மைந்தன் அழகப்பாரியன்
வாழ்யவன் சீர்முகமும் வாய்மொழியும் – வாழியே
எந்தையெழில் தேவபிரான் இன்னருளால் மண்டலத்துச்
செந்தமிழைத் தேர்ந்துரைகும் சீர்.
வாழித்திருநாமம்
செம்பொன் மதிள் குருகை நகர் சிறக்க வந்தோன் வாழியே
தேவராச குருவருளால் தெளிந்த சித்தன் வாழியே
அன்புடனே வேங்கடேசன் அடிதொழுவோன் வாழியே
ஐப்பசியில் உத்திரத்தில் அவதரித்தான் வாழியே
உம்பர் புகழ் ஈடணைத்தும் உரைத்தருள்வோன் வாழியே
உயர் அருளாளருக்கு அடிமை உகந்து செய்வோன் வாழியே
நன்பதின்மர் கலைப்பொருளை நவின்றுரைப்போன் வாழியே
நன் முடும்பை சுந்தராரியன் நல்லடிகள் வழியே.
தொங்கல்
தென்குருகை வாழத் திருவாய்மொழிவாழ
வண்புகழ்சேர் மாறனருள் தாம் வாழ – நன்புவியில்
இந்தமிழ்கள் ஈடளிக்கும் எழில் அழகப்பாரியனே
இன்னுமொரு நூற்றாண்டிரும்
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx