ஸ்ரீ வேங்கடாசார்யர் ஸ்வாமி
(ஐப்பசி- பூராடம்)
நித்யத்தனியன்
ஸ்ரீமத்வத்ஸ குலோத்பவம் குணநிதிம் ஸ்ரீசுந்தரார்யாத்மஜம்
தத்பாதத்வய பக்திலப்த விலஸத் வேதாந்தயுக்ம ஸ்ரீயம் |
நித்யம் ஸ்ரீசடகோப பக்தமநகம் தீநாத்மஸஞ்ஜீவநம்
வந்தே ஸ்ரீவரதாங்க்ரி பத்மநிரதம் ஸ்ரீவேங்கடார்யம் குரும் ||
திருநக்ஷத்ரத்தனியன்
பூர்வாஷாடாஸு ஸஞ்ஜாதாம் துலாயாம் வாத்ஸ்ய மாச்ரயே |
ஸுந்தரார்ய குரோசிஷ்யம் வேங்கடாசார்ய தேசிகம் ||
சீர்
வாழி அழகப்பன் மாமலர்தாள் போற்றும்
வாழியருள் வேங்கடாரியன் வண்சரணம் – வாழியே
மாறன் மறைபொருளை வையகத்தோர் வாழ்வென்னும்
வளமுறவே ஆய்துரைகும் சீர்.
வாழித்திருநாமம்
ஐப்பசியில் பூராடத்து அவதரித்தான் வாழியே
அழகாரும் குருகை நகர் அமர்ந்த செல்வன் வாழியே
எப்புவியும் ததீயர்கட்கு ஈடளிப்போன் வாழியே
எழில் அழகப்பாரியன் தாள் இறைஞ்சுமவன் வாழியே
அற்புதமாம் சீர்பாடியும் ஆய்ந்துரைபோன் வாழியே
அநவரதம் அருளாளருக்கு அடிமை செய்வோன் வாழியே
மூதுவர்கள் புகழ் முடும்பை குலத்துதித்தோன் வாழியே
மூதரிய வேங்கடாரியன் மொய்க்கழல்கள் வாழியே
தொங்கல்
தேசிகர்கள் வாழத்தென் முடும்பைதான் வாழ
மாசருசீர் மாறனருள் தான் வாழ – நேசமுடன்
மன்னுகுருகைநகர் வாழ் வேங்கடாரியனே
இன்னுமொரு நூற்றாண்டிரும்.
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx