ஸ்ரீ குமார சடகோபாசாரியர் ஸ்வாமி
(மாசி – புனர்பூசம்)
நித்யத்தனியன்
சடகோசார்ய பாதாப்ஜே ஸதாஸம் ஸக்த மாநஸம் |
தத்ஸூநும் தத்க்ருபாபாத்ரம் ஸடாரிகுருமாஸ்ரயே ||
திருநக்ஷத்ரதனியன்
குமார சடகோபார்யம் சடகோப குரோ ஸுதம் |
கும்பமாஸி புநர்வஸ்வோர் ஜாதம் வாத்ஸ்யம் ஸமாஸ்ரயே ||
சீர்
வாழி குமார சடகோபன் வண்குரவன்
வாழி அம்புயத்தாள் வாய்மொழிகள் – வாழியே
குருவான சடகோபக் கொண்டல் அருளாலே
திருவாய்மொழியுரைக்கும் சீர்
வாழித்திருநாமம்
மாசிதனில் புனர்பூசம் வந்துதித்தோன் வாழியே
வண் சடகோபாரியன் மைந்தனென்றும் வாழியே
காசியினில் ஞானியர்கள் கருத்தருள்வோன் வாழியே
கடி கமழும் மகிழ்மாறன் கழல் பணிவோன் வாழியே
தேசிகர்கோன் ஆத்தானைச் சிந்தை செய்வோன் வாழியே
திருவாய்மொழிப் பொருளைத் தெரிந்துரைப்போன் வாழியே
ஆசருசீர் பாடிய நூல் ஆய்ந்துரைப்போன் வாழியே
அணி சடகோபாரியன் அம்புவியில் வாழியே
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx