ஸ்ரீ அழகப்பிரானார் ஸ்வாமி
(பங்குனி-அநுஷம்)
நித்யத்தனியன்
வாத்ஸ்ய ஸ்ரீ சடகோபார்ய தநயம் விநயோஜ்வலம் |
வாத்ஸல்யாதி குணாவாஸம் வந்தே வேங்கட தேசிகம் ||
திருநக்ஷத்ரதனியன்
குமார சடகோபார்ய ஸூநும் ஸுந்தரதேசிகம் |
பால்குநே மாஸ்யநூராத ஜாதம் வாத்ஸ்யம் ஸமாச்ரயே ||
சீர்
வாழி அழகப்பிரான் என்னும் வண்குரவன்
வாழியவன் முந்நூல் மணிமார்பும் வாழியே
மெய்யன் குமார சடகோப தேசிகன் போல்
செய்ய தமிழ் ஈடுரைக்கும் சீர்
வாழித்திருநாமம்
சீருலவும் திருக்குருகூர் சிறக்கவந்தோன் வாழியே
திருமகிழ்தார் மாறந்தாள் சிந்தை வைப்போன் வாழியே
பாருலவு தொண்டரென்றும் பரவநின்றோன் வாழியே
பங்குனியில் அனுடத்தில் பாருதித்தோன் வாழியே
ஆரவெழில் புகழ் ஆத்தான் அடிதுதிப்போன் வாழியே
அழகப்பையங்கார் சடகோபன்தாள் தொழுவோன் வாழியே
எழில் அழகப்பிரானார் தாள் இனிதூழி வாழியே.
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx